Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

<$நீலமலர்கள்>

Monday, October 31, 2005

நாளை நமக்கெல்லாம் தலைதீபாவளி



Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? தீபா வளி [ழி] ப்போக்கன்

எனக்கு இது தலை தீபாவளி
இந்த “வலைக்காதலி”யின் கரம்பற்றியபிறகு
வரும் தீபாவளி என்பதால்
இது தலைதீபாவளி!!!

நம்மில் பாதிக்குமேல் இந்தவருடம் தலைதீபாவளியாத்தான் இருக்கும்
எனவே எங்களுடன் சேர்ந்து ரிட்டயர்டு ஆன பெருசுகளும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வாங்க வாங்க !!!


அண்டவெளி மீன் சுட்டிகள்போல்
வலைவழி ஆடும் உயிர்த்தொட்டில்கள்!

உன் வண்ணம் மாறிப்போனாலும்
எண்ணம் நிலைத்திருக்க மின்னும்
மெய்த்தடங்கள்!

முன்னூட்டம் பின்னூட்டமென
கண்ணோட்டம் காட்டும் காலமலர்கள்!

உன் எண்ணத்தோட்டத்தில்
வந்து விளை[னை]யாடும் பட்டுத்தென்றல்!

நிற்க்காத பூமியில் காற்றில்நீந்தும்
அந்தரத்து வலைக்குஞ்சுகள்!

சமத்துவச்சாரல் வீசும்
ஏகாந்த உலகம்!

கத்தியின்றி இரத்தமின்றி போர் நடக்கும்
சத்தமின்றி!

உனக்குள் உலகமா
உலகுக்குள் நீ உலாவா வென
ஊஞ்சலாட்டும் ஊர்க்குருவி!


மின் இழைவேலிக்குள்
கை வலிக்க ப்பாத்திகட்டி
விதைத்தல்,நடுதல்,ஒட்டுதல்,ஓட்டுதல்
வெட்டுதல்,கட்டுதல்,பதியம் என
பலவித்தைகள் செய்து
எல்லாப்பயிகளும்[எல்லாப்பிரியர்களும்]
விழையும் அந்தரத்தோட்டம்
பலபல கண் நீர் ஊற்றித் தழைக்கும்
கற்பகவிருட்சம்!

கண்பட்டால் சோகமென்பர் உலகர்
பிறர் கண்படவே வேள்வி செய்வர்
“பிளாக்கர்”!

உலகம் சுற்றும் வரை
ஊர்சுற்றும் உன் சொந்தம்[உண்மை ச்சொத்து]!


பாசப் பைங்கரங்கள் நேசப்பூக் கோர்த்து
வாழ்க வாழ்க
"தமிழ்மணம்" வாழ்கவென
மாலை சூ[ட்]டிக் கொள்வோம்!

என் கதைநாயகியே
நான் போன பின்னும் நீ
நின்று வாழ்கா!!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, October 29, 2005

மூலிகைச்செல்வங்கள் 2


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

மணத்தக்காளி[மிளகு தக்காளி]
Solanum nigrum



நாம் உணவில் அடிக்கடிசேர்த்துக்கொள்ள வேண்டிய கீரைவகைகளில்
இதுவும் ஒன்று. உடலைத்தேற்றுவதுடன் வாய்ப்புண் குணமாகும்.[B1,B2 விட்டமின்கள் நிறைந்தது].

வயிறு சம்மந்தமான நோய்களுக்கு சிறந்தது.கோழை அகற்றும் மலமிலக்கும் தன்மை உடையது.


சிறுநீர், வியர்வையைப்பெறுக்கும்.தோல் நோய்க்கு சிறந்தது.
தூக்கம் உண்டாக்கும்.


இதயத்தை பலமாக்கும், நாட்ப்பட்ட கல்லீரல் மண்ணீரல் வீக்கத்தைகுறைக்கும்[தண்ணி அடிப்பார் கவனிக்க]
உடலில் ஏற்ப்படும் வீக்கத்தைக் குறையும்[அது எத்த நோயால் ஏற்ப்பட்டிருப்பினும்]

வியாதியிலிருந்து குணமடைந்தோர் உடல் தேற்றியாக
இந்தக்கீரையை பயன்படுத்திவரலாம்.

சுவையின்மையை போக்கி வாந்தி உணர்வைக்குறைக்கும்தன்மை மணத்தக்காளி வற்றலுக்கு உண்டு எனவே கற்பிணிப்பெண்கள்
குறைந்த அளவு மணத்தக்காளி வற்றல் பயன்படுத்தலாம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, October 27, 2005

மூலிகைச்செல்வங்கள் 1


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? மூலிகைச்செல்வங்கள்

நம் அனைவராலும் அறியப்பட்டதும் அன்றாடம் நாம்
பயன்படுத்தப்படுவதுமான மூலிகை மற்றும் உணவுப்பொருக்கள்
பற்றி எழுதலாம் என் எண்ணி முதலில் அருகம்புல்லிருந்து
ஆரம்பிக்கிறேன்
1.அருகம்புல் [Cynodon doctylon]

முழுத்தாவரமும் இனிப்புசுவையும்,குளிர்ச்சித் தன்மையும்
உடையது.உடல் வெப்பத்தை அகற்றும்,சிறுநீர் பெருக்கும்,குடல் புண்களை ஆற்றும்,இரத்தை தூய்மையாக்கும்,உடலை பலப்படுத்தும்,
கண் பார்வை தெளிவுபெறும்.அருகம்புல் பச்சையத்தில் அதிக அளவு
கரோட்டினாய்டுகள் உள்ளன.
இதைப்பற்றி மேலும்


அருகம்புல் வாதபித்த ஐயமோ டீளை
சிறுக அறுக்கும் இன்னுஞ்செப்ப அறிவுதறும்
கண்ணோ யோடு தலைநோய் கண்புகை யிரத்தபித்தம்
உண்ணோ யொழிக்கு முரை” [அகத்தியர்]

அருகம்புல் சாற்றை தினமும் காலை குடித்துவர தோல் நோய்கள்,
இரத்தமூலம்,வயிற்றுப்புன்,சிறுநீர் எரிச்சல்,பெண்களுக்கு இரத்தக்குறைவால் ஏற்ப்படும் வெள்ளை,மருந்துகளினால் ஏற்ப்படும்
ஒவ்வாமை ஆகியன தீரும்.இதன் சாற்றை தனித்தும் பால்கலந்தும் குடித்துவரலாம்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, October 26, 2005

GEMS வாங்களாம் வாங்க!


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? நவமணிகள் [GEMS]


பெரும்பாலான மணிகள்[முத்து,பவழம் தவிர்த்து] எரிமலைக்குழம்பிலிருந்து உருவானவை.இவை கனிம தாதுக்கள் ஆகும்.ஒளிவீசும் காரணத்தால் இது மணி எனலாயிற்று. மணி என்றால் ஒளி, அழகு எனப்படும்.

இந்தமணிகளின் வயது 100கோடி ஆண்டுகள்முதல் 500 கோடி ஆண்டுகள் வரை எனக் கணக்கீடு கூறுகிறது.பண்டைய மணிதன்
18 மணிகள் மட்டுமே அறிந்திருந்தான்.கணிமங்கள் 2000 வரை உள்ளன.இவற்றில் மணிகள் 85 மட்டுமே.இவற்றில் 16 மணிகள்
மட்டுமே நகைக்கு பயன்படுகின்றன.எந்த மணியும் 100% சுத்தமாக இருந்தால் நிறம் கிடையாது.மணிக்குள் தூசு போல் இருக்கும் தனிமம்தான் நிறத்தைத்தருகிறது. மணிக்குள் ஊடுருவும் ஒளி சிதறுவதால் ‘பளிச்’ என கண்சிமிட்டுகிறது.

மணிகளுக்குள் அமையும் தனிமத்திற்கேற்ப மணிகளின் நிறம் அமைகிறது. குரோமியம்-சிவப்பையும்,அலுமனியம்-பச்சை நிறத்தையும்,டைட்டோனியம்-நீலத்தையும்,இரும்பு-மஞ்சள் நிறத்தையும் தரும்.கடுமையான பொருட்க்களில் ஒளி ஊடுருவிச்செல்லும் போது அதன் வேகம் நொடிக்கு 1லட்சத்து 23 ஆயிரம் கி.மீ.ஆகும். மணியில்படும் ஒளியானது ஊடுருவி வெளியேற முடியாமல் எதிரொளித்து ஒளி வெள்ளமாக மின்னுகிறது. ஒளி ஊடுருவும் வேகம் குறையக்குறைய மணியின் தரம் உயர்கிறது.

இம்மணிகள் அந்நாளில் ஆற்றுப்படுகைகளிலும்,கடற்கரை மணலிலும் கிடைத்தன.மண்னுக்கு மேலே கிடைப்பது மணிகள்
மண்னுக்குள் தோண்டியெடுப்பது கனிமங்கள்.மணிகள் தனிமங்கள் பல இருந்தும் நவமணிகள் என ஏன் 9-ஐ மட்டும் நம் முன்னேர்கள் சிறப்பித்தார்கள் என்பது புரியவில்லை.

1.முத்து [PEARL]
உருண்டையாக முற்றுப்பெற்ற வடிவத்தினால் முத்து என்றாயிற்று. பெர்ல்-இந்த ஆங்கிலப்பெயர் பால் எனும் தமிழ் சொல்லிலிருந்து பிறந்தாகும். பாண்டியன் மனைவியின் காற்ச்சிலம்பு முத்துக்கள் உடையது[“யாமுடையச் சிலம்பு முத்துடை அரியே”சிலப்பதிகாரம்] அரி- பால் .

முத்துக்களில் ஆணிமுத்து,கட்டாணிமுத்து சிறந்தது.முத்தில் பழுப்பு, பச்சை,நீலம்,இளஞ்சிவப்பு,கறுப்பு நிறத்திலும் உள்ளன.
மழைத்துளி அல்லது பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து முத்தாகும் என்பது மக்கள் நம்பிக்கை ஆனால் கடலில் வெதுவெதுப்பான நீரோட்டமுள்ள இடத்தில் வாழும் சிப்பியின்உள்ளே சென்றுவிடும் மணல் புழுபோன்ற சிப்பியை உறுத்தல் செய்ய ஒருவித நீர்மம் [epithelium] சுரக்கிறது.பளபளப்பான சுண்ணாபுச்சத்துள்ள நீர்மம் மணலைச்சூழ்ந்து கெட்டியாகிறது.
இதுவே முத்தான “முத்தா”கிறது.

முத்தின் ஆயுள் 100 ஆண்டு முதல் 300ஆண்டுகள். இதன் வேதியல் பெயர் கால்சியம் கார்பனேட் …

2. பவழம் [CORAL ]
முத்துபோன்று கடலில் விளையும் ஒரு மணி பவழம். இதன் நிறம் பொதுவாக சிவப்பு என்றாலும் வெள்ளை,நீலம்,கறுப்பு நிறங்களிலும் உள்ளது.முத்தைப்போலவே வெதுவெதுப்பான நீர்ப்பகுதியில் பவழம் விளையும்.பவழப்பூச்சி[பாலிப்]எனும் கடல்வாழ் உயிரினம் கரையான்போல் கட்டும் புற்றே பவழப்பாறையாகிறது. இது பாறைபோல் இருக்காது,பல கொடிகள் கிளைகளையுடைய மரம்போல் இருக்கும். இதன் வேதியல் பெயரும்-கால்சியம் கார்பனேட் தான்.


3. வைரம் [Diamond]
ஆப்ரிக்கா,தென் ஆப்ரிக்கா நாடுகளில் அதிகம் தோண்டி எடுக்கப்படுகிறது.மண்னுக்கடியில் 1 கி.மீ ஆழத்தில் வைரம் கிடைக்கும்.சுத்தமான வைரம் நீரில் மிதக்கும்.நிறமற்ற வைரமே உயர்ந்த தரம்.இது பச்சை,சிவப்பு,மஞ்சள்,நீலம்,சாம்பல் நிறங்களிலும் கிடைக்கிறது.விலையுயர்ந்த வைரம் ஒரு சாதாரண கறித்துண்டுதான்,ஒரு துண்டு கரி,ஒரு துண்டு வைரம் இரண்டையும் எரித்தால் மிஞ்சுகின்ற சாம்பல் ஒரே தன்மையுடையது தான்.
இதன் வேதியல் பெயர்-கார்பன் இரும்பு ஆக்சைடு.


4. வைடூரியம் [Lapis Lazuli]
இது பூனைக்கண் எனவும் கூறுவர்.”தீதறு கதிர்”என சிலப்பதிகாரம் இதைக்கூறுகிறது.பொதுவாக இது பொன்னிறம் உடையது.


5. நீலம் [Saphire]
நீலநிறத்தின் காரணமாக இப்பெயர் பெற்றது.சங்ககாலத்தில் மணி என்றாலே நீலத்தைத்தான் குறித்தது.”நின்னது திகழொளி சிறப்பிருள் திருமணி”[பரி பாடல்]நீலமணிகள் வான்நீலம்,கடல்நீலம் எனவகைப்படுத்தப்படும்.இதில் வான்நீலமே சிறந்தது.நீலமணி ஆரஞ்சு,மஞ்சள்,பச்சைநிறங்களிலும் கிடைக்கிறது.அவற்றை சிவப்புநீலம்,கொம்புநீலம் என்பர்.
பால் பாத்திறத்தில் நீலக்கல்லைப்போட்டால் பால் நீலநிறமாக தெரியும்.இதுவெ உயர்ந்தநீலமாகும். இலங்கை நீலம்தான் உலகப்புகழ் பெற்றது.அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள லிங்கன்,கென்னடி சிலைகளின் முகம் மட்டும் நீலமணிகள்.
அலுமனியம் ஹைட்ராக்சைடு இதன் வேதியல் பெயர்.


6. மரகதம் [Emerald]
Emerald என்பது பாரசீகச்சொல் இத்ற்கு பச்சை என்பது பொருள்.பண்டைக்காந்தொட்டே மனிதன் அதிகம் விரும்பும் மணியாகும்.வைரத்தின் அளவுக்கு மதிப்புள்ளது.இதில் உள்ள குரோமியம் இதற்கு பச்சைநிறத்தைத்தருகிறது.
கொலம்பியா,வட கலிபோர்னியா பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது.
போராஸ் அலுமியம் ஆக்சைடு இதன் வேதியல்பெயராகும்.


7. மாணிக்கம் [Ruby]
அழகு,ஒளி,மினுமினுப்பு எல்லாவற்றிலும் வைரத்தை விட மாணிக்கம் சிறந்தது. வட மொழியில் இரத்தினம்,மற்றும் பதுமராகம்[தாமரைச்சிவப்பு] என்பர்.சிவப்பு நிறத்தைக்குறிக்கும்’ரூபஸ்’என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து ரூபி எனும் ஆங்கிலச்சொல் பிறந்தது.
“மழபாடியுள் மாணிக்கமே”என தேவாரம் பாடுகிறது.
“என் காற்சிலம்பு மணியுடை அரியே !”என்கிறது சிலப்பதிகாரம்.
இதன் வேதியல் பெயர்-அலுமனியம் ஆக்சைடு.


8. கோமேதகம் [Sardonyx or Hassinet]
நவ மணிகளில் விலை குறைந்தது கோமேதமே!
பசுவின் சிறுநீர் போன்ற நிறத்துடன் இருப்பதால் இப்பெயர் பெற்றது.
இதன் வேதியல் பெயர்-புளூரின் ஹைட்ராக்சைடு.


9. புஷ்பராகம் [Topaz]
‘ டோபாஸ்’ என்றால் மஞ்சள்கல் எனப்படும்.இது குறைந்தவிலையில் கிடைப்பதால் ஏழைகளின் வைரம் எனப்படும். இதன் வேதியல் பெயரும் புளூரின் ஹைட்ராக்சைடு தான்.



இந்த மணிகளால் யாருக்கு என்னபயனோ நகைக்கடை அதிபர்களுக்கே அதிக லாபம். ராசிக்கேற்ற கல் இது அது என மக்களைக்குழப்பி குளிர்காவேர் உலகெங்கும் பார்க்கிறோம். அறிவியல் அடிப்படையில் இந்தக்கற்களுக்கும் கிரகங்களுக்கும் எந்தவிதத்தொடர்பும் இல்லை.

சித்தமருத்துவத்தில் முத்து பவழம் பஸ்பமாக்கப்பட்டு ஒவ்வாமை,நுரையீரல் மற்றும் எலும்பு சம்மந்தமான நோய்களுக்கு வழங்கப்படுகிறது.







Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, October 22, 2005

சு.ரா.அவர்களின் இறுதிச்சடங்கு

சு.ரா.அவர்களின் இறுதிச்சடங்கு

சு.ரா. அவர்களின்”ஜே.ஜே.சில குறிப்புக்கள்” என்னை ஈர்த்த ஒன்று.அந்த புத்தகத்தை இப்போது மீண்டும் படிக்கத்தேடினேன் காணவில்லை. யாரிடம் கொடுத்தேனோ யார் சுட்டார்களோ அறியேன்.
சு.ரா. அவர்களின் மறைவை நினைக்கும்போது கண்ணதாசனின்

பாமர ஜாதியின் தனிமனிதன்
படைப்பதினால் என்பேர் இறைவன்..
......
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை...”
என்ற வரிகளே நினைக்கு வருகிறது.
இந்த நாளிதழ் செய்தியுடன் அஞ்சலி செய்கிறேன்.




Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, October 20, 2005

மனதைத்திருடியதில் சுட்டது

மனதைத்திருடியதில் சுட்டது...


ஆண் இனம் குறைந்துபோகக்காரணம் !! சில...









Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, October 16, 2005

இருந்தும் இல்லாமல் இருக்கின்றோம்

மனிதனைத்தேடி

கோடான கோடி ஆண்டுகளாக கொஞ்சம் தலைசாச்சுListed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????
ஊர் சுற்றும் இந்த பூமிக்கு வடக்கு கிழக்கெல்லாம்
சொல்லித்தந்தான் மனிதன்.

சூரியன் நிலவு இடி மின்னல்
அதிசயம் கண்டு மிரண்டான் மிரண்டுதெளிந்தவன் அதிசயம்காட்டி
அடுத்தவன் விழியை அகலவைத்தான்!

அதிசயக்காரன் அடுத்தவன்
முதுகைக் குதிரையாக்கி
சவாரிசெய்யத்துவங்கினான்
சவாரி சுகமாய்த்தோனவே
சாட்டைகள் நிறைய வாங்கினான்!

வண்ணவண்ண சாட்டைகள்
வகைவகையாய்-
பூக்கள்கோர்த்தது,
தேனில்தடவியமுட்க்கள் பதித்தது,
பாம்புத்தோலில்பக்குவமாய் செய்தது.
செய்துகொடுத்தவனே
அடியும்வாங்கி
ஆகா! ஆகா! ஆனந்தமென்றான்.

அதிசம்காட்டியவன் அசந்தநேரத்தில்
புதியவன் வண்டியோட்டினான்
இளையவன் கண்களால் மக்களைக்
கட்டிப்போட்டான்.
கட்டுவதில் போட்டிவந்தவுடன்
கட்டுத்தரிகள் இடம்பெயர்ந்தன.

ஆடுகளும் மாடுகளும் கூட்டம் போட்டு
நல்ல மேய்ப்பனை தேடிப்போயின!
மேய்ப்பர்கள் கூட்டத்தில்
ஒப்பந்தமாச்சு
ரகசிய சாசனம் சட்டங்களாச்சு!!!



பிரபஞ்சவெளியில் கடுகளவுபூமி அதில் கால்வாசியே நிலப்பகுதி.அதிலும்
காடு,மலை,ஆறு என போனதில் எஞ்சிய மணல் அளவு மண்ணில்
மனிதன் ஏன் இப்படி???

இதற்க்காகவே மேலும் ஒரு கவிதை [கவிதை தானோ?]


கோவிலிலே தேடாதே மனிதா இறைவன்
மனக்கூண்டுக்குள்ளே கிடக்கிறானே மனிதா!
கூண்டைக்கொஞ்சம் திறந்துவிடு மனிதா!
உறங்கும் உள்அவனை உசிப்பிவிடு மனிதா!

உறக்கமதில் சிறு கனவே வாழ்க்கை
காலம் விழித்துக்கொண்டால்
முடிந்து போகும் வேட்டை!

தேடித்தேடி அலைவதெதை தோழா!
வாழ்வில் நிலையானது எது சொல் தோழா!

தொடக்கமதில் முடியும்
முடிவதிலே தொடங்கும்
அந்தரத்து அரங்கம் இந்தபூமி-உன்
சொந்தமொரு அணுவுமில்லை சாமி!

மதம் மொழி இனம் தேசம் எனக்கூவி
வெறியாடும் கூட்டமெல்லாம் போலி,
செயற்கைச் சாவுகளும்,
வறுமை,
பசி, பிணி நேர்வுகளும்
சரித்திர சாசணம் ஆக்குவதா நீதி?


அன்பே நிரந்தரம் !
அன்பு ஒன்றே ஆனந்தம்!
அன்பு கொடுப்பதும்
கிடைப்பதும் பேரின்பம் !






Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, October 09, 2005

12 .கண் முன்னே கடவுள்


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? வெறுமனே படம் காட்டாமல்
எனது நண்பருக்காக அன்று எழுதிய பாடலை இந்த படத்துடன்
பதித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் “மறுபதிப்பு” செய்கிறேன்.


இந்தப்பாடலைப்படிக்கும் முன்”வருஷமெல்லாம் வசந்தம்”
“எங்கே அந்தவெண்நிலா” பாடலை ஓடவிட்டு படித்தீர்களானால்
சுவையாக இருக்கும்.




தேவாதி தேவனே ! தேவாதி தேவனே !
தேவாதி தேவனே ! தேவாதி தேவனே !
முள்ளால் மலர்சூட்டியும்
வாடாமல ராகினாய்
தேவாதி தேவனே !
தேவா தி தேவனே ! தேவாதி தேவனே !


துன்பநிழலையும் இன்பமாய்க்காணுவாய்
தூய மனக்கடல்.. மாயக்கண்ணனே !
துயரக்குரல்களின் சோகம் மாற்றிடும்
தூய தூதனே! எங்கள் தேவனே !

ஆடுகள்மேய்ப்பது உன் தொழிலா!
மக்கள் மனங்களை துவைப்பது
உன் எழிலா!
துடுப்புகளில்லா பாய்மரமாய்
திசையின்றி ஓடும் வாழ்வினிலே

நானோர் பாவன் உந்தன் நேயன்
நல்வழி என்னைமாற்றுமைய்யா !என்றும்
நல்வழி என்னை மாற்றுமைய்யா !

தேவாதி தேவனே ! தேவாதி தேவனே !


அற்புத அண்டத்தில் ஆடும் பந்தென
கடுகெனபூமிதான் ஆனால் ஆட்டம் கோடிதான்

அமைதியை விரும்பிடும் அன்பர்கள் உலகமாய்
இதயத்தைமாற்றிடு எம்மை நல்லவராக்கிடு!

சிலுவைகள் சுமந்தாய் எமக்காக!
எந்தவலியையும் பழக்கனும் அதற்க்காக
மீண்டும் மறித்தாய் எதற்க்காக-அது
இயற்க்கையின் நியதி அதற்க்காக!

ஒற்றுமை வேண்டி உலகெலாம் சுற்ற
வல்லமை கொடு நல்லவனே!நல்
வல்லமை கொடு நல்லவனே!

தேவாதி தேவனே ! தேவாதி தேவனே !
தேவாதிதேவனே ! தேவாதிதேவனே !
முள்ளால் மலர்சூட்டியும்
வாடாமல ராகினாய்
தேவாதி தேவனே !

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, October 07, 2005

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, October 06, 2005

கண்முன்னே கடவுள்

கடவுளைக்காண வாரீர்







Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, October 05, 2005

11.திரும்பிப்பார்த்தபோது...


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? 11. பழைய சோறும் வெங்காயமும்-1

இளைய வலைநண்பர்களை பார்க்கும்போது
சற்றுபொறாமையாகவே இருக்கிறது.அந்தக்காலத்தில்
இதுபோல் கணிணியோ வலைப்பக்கமோ இல்லாததால்
எனது 20 வயதுகளில் எழுதியதெல்லாம் நட்புவட்டத்துடன்
நின்று போனது.அந்தஏக்கத்தின்தாக்கமே இவைகள்.
சித்தனின் ஆட்டோகிரேப் சில உங்களுக்காக...[1975-1980]


1. மாமதம்

உலகின் அனைத்துமத ஏடுகளையும்
ஒன்றாய்க்குவித்து நெருப்பிட்டால்
அதில் குளித்து இன்றே நான்
சாகத்தயார்..

2. குழந்தைகள்

உன் பெற்றேரை நீ படுத்தியபாடெல்லாம்
வட்டியுடன் உனைப்ப்டுத்தவருகின்ற
அசல் தொல்லை..


3 சிறு கீறல்

அமைதியான குலம்தனிலே
கல்விழுந்து சிறு சலனம்
அலை ஓய்ந்து போனாலும்
மனத்தடியில் கல் கிடக்கும்..

4 மாதவிக்கொடிப்பூ

மாதவி நினைத்திருந்தால்
மாநகரம் பெற்றிருப்பாள்
மாதவனைத்தான் நினைத்தாள்
மாமணிமாலை பெற்றெடுத்தாள்

தோன்றிவந்த குலமோ கணிகை
வேறூன்றி வளர்த்தாள்அன்பை தாரகை
கோவலன் என்பான் அவளது மாளிகை
கோமகள் அவளொரு காவிய தேவதை

அனலில் இட்ட கண்ணாடி மீது-ஒரு
அமுதத்துளி வீழ்ந்தாலும் ஏது
சந்தேகம் என்னும் வினைத்தூது
மென் தேகம் வாடியதே-உயிரோடு

தாலிகொள்ளா நன் மனையாள்
போலியில்லா நெஞ்சினியாள்
வேலிக்கல்லாய் இருந்தமன்னன்
வேசிமுள்ளாள் என்று சென்றான்

சித்திரைப்பொன்மதி விழாக்காலம்
சிற்றிடையாழி[ளி]ன் எழிற்கோலம்
நித்திரையின்றி விழி பாவம்
நிறைந்த அன்பிற்கா பாலம்?

அவிழ்தக்கனவுகள் அவன் தந்தான்
மகிழ்ந்தகாலங்கள் மறந்துபோனான்
கவிழ்ந்தபடகாய் அவள் நிலைதான்
அவிழ்ந்தகூந்தலில் புதைமதிதான்

இனியவள் நெஞ்சின் திருக்கதவு
இனி யவள் வாழ்வில் கருக்கனவு
தனிமை வாழ்வில் புது உறவு
புனிதப்புத்தன் பூ வரவு...


5.பேதை


முகம் பார்க்கும்கண்ணாடியான கோதை
அகம் எங்கும் பருவத்தின் உணர்ச்சிக்கோர்வை

தன்முன்னே வந்தமன்னன் மன்மதனென்று
கண்முன்னே ஆயிரமாம் கற்ப்பனை கொண்டு

காலத்தின் விளையாட்டுக்கவிதை எழுதி
கோலத்தை வரைந்திடுவாள் காவியமென்று

காவியமும் ஓவியமும் கண்ணீரெழுத்தாய்
ஆனபின்னே வாடிடுவாள் காகிதப்பூவாய்..



6.காதல் பசி

காதலர்க்கு பசியேது!
காதலுக்குத்தான் பசி
ஆதலினாலோ
பலசமையம்
காதலர்
உயிர்குடித்து காதல்
வாழ்கிறது.?..

7.கடலை+காதல்> வைரஸ்

ஓய்ந்தமழையில்
சாய்ந்தபூவாய்
ஒவ்வொரு துளியாய்
மங்கைகரைந்தாள்!


மறந்தாயோ!
கல்லூரி மரத்தடியை!
காதல் மனச்செடியை!

இன்பக்கிளை நிழலில்
நாம் வறுத்தகடலையெல்லாம்
தேனாய்ச்சுவைத்ததன்றோ!
வறுத்தகடலையெல்லாம்
பழசாய்ப்போனதினால்
நானிறு கசந்தேனோ!

வாழ்வின் ஒத்திகையென்றாய்-இன்று
ஒத்திப்போட்டே வாழ்கின்றாய்!

உன் நினைவைக்கொஞ்சம்
உலவ விட்டுப்பார்
உல[ள]ரவில்லை இன்னும் என்
உதடுகள்!

காயம்செய்தாய் மாயம்செய்தாய்
கனவுகள்தந்து காலம்புதைத்தாய்!
நான்புதைந்து போனேன் –நீ
மறை[ற]ந்துபோனாய்!

தேர்வுடன் மறந்துபோகும்பாடமென
தேர் இவளைத் தெருவில்விட்டாய்!
"பட்டம்" வாங்கிவிட்டு
"நூல்" இன்றிப்பறப்பாயோ!

எத்தனை சினிமா போயிருப்போம்
முழுசாஏதும் பார்த்தோமா-உன்
மனத்திரையைக்கொஞ்சம்
விலக்கிப்பார்! சென்சார் காட்சிகளே
முழுநீளமாய் நீளும்!

பாட்டுப்போட்டியில் பாடலை
பாதியில் நிறுத்தியபோதும்
பரிசுதந்தாயே! இன்றும் நான்
பாதியிலே!

கல்லூரிப்பேருந்து கேள்வியற்று
கிடந்தபோது
நாம் மட்டும் பலமுறை
பயணித்தோம்!
இது உனது வாகனம்
பிறர் பயணிக்க விரும்புவையோ?

என் கண்களின் ஆழத்தில்
அடிக்கடி நீ மூழ்கிப்போவாய்
உயிர்கொடுத்துக்காத்தவளின்
மூச்சைப்பறிப்பாயோ!

மேத்தாவின் ”கண்ணீர்ப்பூக்களை”
பரிசளித்தவனே!இன்று நானே
“கண்ணீர்ப்பூ”
எனை யாருக்கு
பரிசாக்கப்போகிறாய்!

அள்ளி என்றாய் தாமரையென்றாய்
நிலவென்றாய் கதிரென்றய்
இப்போதுபுரிகிறது நீ
இரவும்பகலும் ஒனறாய்
வேண்டுபவன் என்று!

“சித்திரை நிலவே மார்கழிக்குளிரே”
அன்று உரைத்தது இன்றுபுரிந்தது-நீ
கோடையும் குளிரும் ஒன்றாய்
கேட்ப்பவனென்று!

இறுதியாய் ஓர் வேண்டுகோள்!

உனது காதலித்தகடிதமெல்லாம்
கட்டிவைத்துக்காத்திருப்பேன்
சுட்டியென சொன்னவனே
எட்டியென நினைக்காதே!
எட்டி நின்று வாட்டாதே
கேட்டிமேளச்சத்தமிட்டு
கட்டிக்கொள்ள வந்துவிடு!

ஓய்ந்தமழையில்
சாய்ந்தபூவாய்
ஒவ்வொரு துளியாய்
மங்கைகரைந்தாள்!


நீங்க விரும்புனா
மீண்டும் வருவேன்
!

சின்னவயசு சித்தன்


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, October 02, 2005

ஐம்பொறிகளும் ஆடும்மனிதனும்


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? ஐம்பொறிகளும் அவுட்

இன்னும் பத்துஆண்டுகளில் தமிழ் நாட்டில்
பாதிப்பேருக்கு கண்,காது,மெய்,வாய்,மூக்கு
செயலற்றுப்போகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

பிறக்கும் குழந்தைகூட அம்மாவின் முகத்தைவிட
கம்யூட்டர், டிவியைத்தான் அதிகம் பார்க்கிறது.
நம் தாத்தாவெல்லாம் நிலாவெளிச்சத்தில் படிச்சாங்க வாழ்ந்தாங்க, நம் வாரிசுகளோ குழல்விளக்கு இல்லாமல்
தூங்கக்கூடப்போவதில்லை.

கண்ணாடி போடாத மக்களின்
எண்ணிக்கை குறைஞ்சுகிட்டேவருது.
வீட்டில் டிவி, பஸ்ஸில் டிவி,காலேஜ்ல டிவி,
டீக்கடை,ஹோட்டல் எங்க போனாலும் எதையாவது பாக்கனும்.
மனுசன யோசிக்கவே விடக்கூடாதுன்னு தான்
இத்தன சேனல்களோ! கண்கள் என்ன பாவம் செய்தன?

நம்ம ஊர் பஸ்ஸில் ஏரும்போது கட்டாயம் கொஞ்சம்
பஞ்சு எடுத்துப்போங்க!இல்லீன்னா உங்களுக்கு தலைவலி
நிச்சயம்,ஏன்னா அத்தனை சத்தமா ஆடியோ,வீடியோ
சாதனங்கள்.

பணம் படைச்சவன் முகமூடிக்காருக்குள்ள
சத்தம் காட்டறான்,பஸ் ஓட்டறவன் பஸ் சத்தத்தையும் மீறி
dts காட்டறான். கடை,பவர்லூம் பட்டறைகள்,
ஹோட்டல், பார்க், கோயில் எங்கெங்கு
கானினும் சப்த்தமடா!
செல்போனுடன் அலைவதைப்போல்
நாளை செவிட்டு மிஷினுடன் தான் அலையப்போகிறோம்.



பாலை விட அதிக விலைகொடுத்து தண்ணி வாங்கறோம்
இன்னக்கி குடிக்க வாங்கறதையே நாளைக்கி குளிக்கவும்
வாங்கும் நிலைமை வரலாம்.[இப்போதே வசதிவீட்டு கல்லூரி
கண்மணிகள் சிலர் தலைக்குக்குளிக்க mineral watter ரை பயன்
படுத்துவதாக கேள்வி]

ஆறு ஓடிய பாதையெல்லாம்
சாயக்கழிவுகளும் பாலித்தீன் குப்பைகளுமாய்
ஆயிடுச்சிங்க.

ஆடு மேய்க்கும் சிறுவன் கூட
பாட்டிலில் தண்ணிகொண்டு போறான்னா பாருங்களேன்.
அந்த அளவுக்கு தண்ணிய நாம சுத்தமா வச்சிருக்கோம்.
வெய்யில் கொடுமையா காய்யுது,{ஓசோனை ஓட்டை
போட்டுட்டோம்}சுத்தமான தண்ணி குடிக்கவேகிடையாது.
தலைக்குக்கூட எண்ணை தேய்க்கறதில்ல
தோல் வியாதி வந்தா லேசில போகதுங்க.
பாவங்க நம்ம அழகுத்தோல்.


“பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்” எல்லாம் போச்சுங்க
இப்பொல்லாம் “சாக்கடையின் மத்தியிலே சதிராடும் தென்றல்” தான்.
காற்றில் நச்சுத்தன்மை அளந்துசொல்வதோடு மறந்து போகிறோம்.


ஆஸ்த்மா,அலர்ஜி நோய்கள் நம்மை கொள்ளையடிக்கின்றன.
தூசியில்லாத காத்து வேணுன்னா ஒரு நாள் லீவ் போட்டுட்டு
கிராமத்துப்பக்கம் தான் போகனும்.மூக்குக்கு filter சீக்கிரம் வந்திடும்.


கண்போச்சு,காதுபோச்சு, சுவாசம்போச்சு, தோலின் மென்மைபோச்சு
வாய் மட்டும் இருந்து என்ன செய்யப்போவுது,பேசிப்பேசி சண்டை
வளக்கும்,கண்டதைத்தின்னு சொந்த சுவை மறந்து போகும்.


மெல்ல மெல்ல கொல்லும்[கொள்ளும்]விஷமெனத்தெரிந்தும்
பெப்சி கோக் பான்மசாலா மது புகை என வகைவகையாய்த்
தேடும்.உடலும்கெட்டு உள்ளமும்கெட்டு ஊரைக்கெடுக்கும்.



மொத்தத்தில் மனுசனுக்கு முக்கியமான ஐம்பொறியும்
மனுசனாலேயே கொஞ்சம் கொஞ்சமா செயல்குறஞ்சு
திணறிக்கிட்டிருக்கு...

மேலே உள்ளபடத்துக்கும் மேட்டருக்கும்

சம்பந்தம் ஒன்னும் இல்லீங்க..சும்மாதான்...







Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.