Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

<$நீலமலர்கள்>

Tuesday, June 20, 2006

பிஞ்சு பழுத்ததோ?!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????``எத்தனை தரம் சொன்னாலும் கேட்க மாட்டா’’ வசை பாடியபடியே அம்மா தூங்கிக் கொண்டிருந்த மாலாவின் பாவாடையை கால்வரை இழுத்துவிட்டாள். ஒரே மகள் என்பதால் ஏகச் செல்லம் ,தூக்கத்தில்கூட ஒரு கால் எப்போதும் அப்பாவின் இடுப்பில்தான் கிடக்கும்.
`பத்தாம் க்ளாஸ் வந்தாச்சு, இன்னும் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் ஆம்பிள்ளைப் பசங்க கூட கில்லி விளையாடறா, தோட்டக்காரனைப் பின்னால் வைச்சுகிட்டு சைக்கிள் விடப் பழகறா. இதையெல்லாம் நீங்க கண்டுக்கறதே இல்லை, கொஞ்சம் அதட்டி வைக்கலாமில்லையா’ என்று ராஜாவிடம் புலம்பினாள் கவிதா.
`சின்னக் குழந்தையைப் போய் இதெல்லாம் சொல்லி குழப்பாக்கூடாது’ன்னு சுருக்கமாகச் சொல்லிட்டு ஆபீஸ் போயிட்டான்.
சாயங்காலம் வரும்போது தூரத்திலிருந்து பார்த்த மாலா ஓடிவந்து `அப்பா அப்பா ஐஸ்க்ரீம் சாப்பிடப் போலாம்பா’ ன்னு தோளில் மாலையாகத் தொங்கினாள். கவிதா சொன்னதுபோல் சில விஷயங்கள் சொல்லித்தர வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டு பூங்கரங்களை மெதுவாக விலக்கினான், பதிலேதும் சொல்லாமல். அந்த சின்ன பாராமுகத்தைக்கூடத் தாங்க முடியாதவளாய் விருட்டென்று கையை இழுத்துக்கொண்டு ஓடி விட்டாள்.
கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்த பிறகு, மகளை சமாதானம் செய்யிற மாதிரி,` வாடா, ஐஸ்க்ரீம் கடைக்குப் போகலாம்’னு சொன்னான். பிடிவாதத்தில் அம்மாவைக் கொண்டிருந்தவள் பதிலும் சொல்லாமல் உம்மென்றே இருந்தாள். இரவு படுக்கும்போது அப்பா ஒரு பக்கம், அம்ம ஒருபக்கம் படுக்க இருவர்மீதும் கால் போட்டு படுக்கிறா ஆசாமி, ஒருக்களிச்சு அம்மாவுக்கு அந்தப் பக்கம் படுத்துகிட்டா. ராஜா எவ்ளவோ கொஞ்சியும் கூட சமாதானம் ஆகவில்லை.
நடுராத்திரி பக்கத்தில் ஏதோ சலனம் தெரிந்து லைட் போட்டுப் பார்த்தான். மாலா தேம்பிக் கொண்டிருந்தாள். ஆதரவாக பட்ட அப்பாவின் கையசைவில் ஓடிவந்து ஒட்டிக்கொண்டாள்.
மறுநாள் முழுக்க அவளின் அழுமூஞ்சித்தனம் பெருமைக்காகக் கிண்டலடிக்கப் பட்டது. அவளும் சளைக்காமல், எங்கப்பாவுக்கு நான் பக்கத்திலே இல்லாட்டி தூக்கமே வராது, அதான்’ ன்னு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டாள்.
யார் கண் பட்டதோ, நாலே மாதத்தில் பிரளயமே புகுந்துவிட்டது அந்த சின்னஞ்சிறு குடும்பத்தில். கவிதாவுக்கு சாதாரண தலைவலியாக ஆரம்பித்த நோவு மூளையில் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டு ஆஸ்பத்திரியும் வீடுமாக ஒரே அலைச்சல். பொதுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்ததால் மாலா பாட்டியின் பராமரிப்பில் தற்காலிகமாக விடப்பட்டாள். இடையிடையே அப்பா வரும் நாட்களில் அவனது ஆறுதலான அண்மைக்கு ஏங்குபவளாக ஓடிவருவாள்.
இடையில் ஒருநாள் அம்மவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போனாள். மகாலட்சுமி மாதிரி தழையத் தழைய பின்னலில் பூச்சூட்டி வலம் வரும் அம்மா, மழுங்க மொட்டையடிக்கப்பட்டு கை மூக்கு என்று எல்லா இடங்களிலும் ட்யூப் சொருகிப் படுத்திருந்த கோலம் அவளை மிகவும் பாதித்து விட்டது. திடீரென்று முதிர்ச்சி வந்துவிட்டதுபோல் அமைதியாகிவிட்டாள்.

மறுபடி அம்மாவைப் பார்க்கப் போகவே இல்லை. அடுத்த மாத இறுதிக்குள்ளாகவே அம்மா நிரந்தரமாகப் ப்ரிந்துவிட்டாள். அப்பாவைப் பார்க்கவே சகிக்கவில்லை. பாதி ஆளாகிவிட்டார். எல்லாக் களேபரங்களும் ஓய்ந்து வெறுமையான அடுப்படியை வெறித்துக் கொண்டிருந்த போது பாட்டி மெதுவாக அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்` மாலா கொஞ்ச நாள் எங்க கூட இருக்கட்டும் மாப்பிள்ளை’ அப்பா முடியாது என்னுடனே இருக்கட்டுமென்று சொல்லுவார்னு நினைச்சா. ஆனா அப்பாவும் சரின்னு சொல்லிட்டார்.
ஏதோ புரிந்தது போலும் இருந்தது, ஆனால் எல்லாமே குழப்பமாகவும் இருந்தது. இனிமேல் என்னைக்குமே அப்பா இடுப்பில் கால் போட்டுத் தூங்க முடியாது என்ற உண்மை மட்டும் புரிந்தது. இதற்காகவாவது சின்னக் குழந்தையாக இருந்திருக்கலாமோன்னு முதல்தரமாகத் தோன்றியது. மலரும் முன்பே முதிர்ந்துவிட்டதுபோல் ஆனாள் அந்தப் பிஞ்சு!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, June 19, 2006

நல்வாழ்வு குறிப்புகள் -1


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? நல்வாழ்வு குறிப்புகள் -1

மனிதனின் நல்வாழ்க்கைக்கு உடல்,உள்ளம் நலமுடன் இருத்தல் மிக அவசியமாகும்.இதை நம்தமிழ் முன்னோர்கள் மிகதெளிவாக
கூறிசென்றுள்ளார்கள்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.’

‘உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே’

“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்பது இனிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே” [திருமூலர்]

நாம் நோயின்றி நீண்டநாள்வாழ சில அன்றாட
நாள் ஒழுக்கம்பற்றி பார்ப்போம்.
சுவரின்றி சித்திரமில்லாதது போல் உடல் இருக்கும் வரைதான் உயிர்நிலைக்கும்.அகத்தூய்மை,புறத்தூய்மையுடன் உடலைப்பேணிக்காத்தல் நம் கடமையாகும்.

அதிகாலைஎழுந்து பல்துலக்கியபின்புன்புதான் எதுவும்
குடிக்கவேண்டும்.காப்பிதான் உங்கள் உயிர் என்றாலும்
நிறையதண்ணீர் குடித்தபின் காப்பி குடியுங்களளேன்.

காலைக்கடன்களை இயல்பாக கழிக்க பழகிக்கொள்ளவேண்டும்.
மலம் ஒன்று[அ]இரண்டுமுறையும்,சிறுநீர் 5[அ]6 முறைகழித்தல் இயல்பு. இதற்கு மிகினும் குறையினும் நோய் என அறிக.

காபிக்குப்பதிலாக அருகம்புல் சாறு மிகவும் நன்று.
அல்லது கீழ்க்கண்ட பானம் செய்து குடிக்கலாம்
கரிசாலை இலை 100 கிராம்,தூதுவளை,முசுமுசுக்கை,சீரகம்,
வகைக்கு 25 கிராம் இவைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி
வைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீரில் காய்ச்சி பால்+
சர்க்கரை [நாட்டு சர்க்கரை] சேர்த்து அருந்தல் நலம்.இதனால்
இரத்த விருத்தி,உடல் வலிமை உண்டாகும், சளி மற்றும் வயிறு
சம்மந்தமான தொந்தரவுகள் உண்டாகாது.

உடற்பயிற்சி பழக்கம் உடலுக்கு வலிமையும் மனதுக்கு அமைதியும் அளிக்கும்.”வாக்கிங்” , யோகாசன முறைகள் நல்ல பயந்தரும். தியானம், மூச்சுப்பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் வன்மைதரும்.

தினசரி இருமுறை குளிப்பது உடல் வலி நீங்கும்,கண் தெளிவு,தோல் மிருது உண்டாகும்.வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நலம்.உடல்தூய்மை ஆரோக்கிய தாம்பத்திய வாழ்வுக்கு வழிவகுக்கும்.

சுத்தமான தண்ணீர் நாள்முழுதும் குடித்தால் வயிற்றுப்புண்,சிறுநீரககோளாறுகள் தோன்றாது. உறங்கச்செல்லும் முன் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.தண்ணீரில் சீரகம் போட்டு காய்ச்சி குடிப்பதும் நல்லது.

உணவுமுறைகளில் அறுசுவையும் கலந்த கலப்புணவு உடலுக்கு தேவையாகும்.
[அறுசுவைகள்-காரம்,கைப்பு ,இனிப்பு ,புளிப்பு ,உவர்ப்பு ,துவப்பு]
இனிப்பு ,புளிப்பு ,உப்பு – கபத்தை அதிகரிக்கும்
காரம் ,கசப்பு ,துவர்ப்பு – வாயுவை அதிகரிக்கும்
இனிப்பு ,கசப்பு ,துவர்ப்பு – பித்தத்தை குறைக்கும்
புளிப்பு ,உப்பு ,காரம் – பித்தத்தை அதிகரிக்கும்.”வயிற்றுப்புண்” இருந்தால் அதிகமாகும்.
இனிப்பு – மகிழ்ச்சி,பலம்,உடல் பருமன்
கசப்பு – ஜீரணம்,புழுக்கொல்லி
புளிப்பு – ஜீரணம்,வாயு குறையும்,அரிப்பை அதிகரிக்கும்
உவர்ப்பு – மலம் சிறுநீர்த்தூய்மை ,உடல் மிருதுவாகும்,வியர்வை அதிகரிக்கும்,முடி நரைக்கும்
துவர்ப்பு – இரத்தம் சுத்தமடையும்,தோல் மிருதுவாகும்
கார்ப்பு – ஜீரணம் ,வெப்பம்

உணவைப்பொருத்தவரை அவரவர் உடலுக்கேற்ப ,செய்யும் தொழிலுக்கேட்ப,தட்பவெட்ப காலநிலைகளுக்கு தகுந்தாற்போல் ,எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுவகைகளை பழகிக்கொள்தல் நலம்.


சித்தமருத்துவத்தில்
“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி
நான்குவேளை உண்பான் பாவி”என்பர்.

பொரும்பாலான நோய்கள் நம் உணவுப்பழக்கம் அதன் மாறுபாட்டில் ஏற்படுகின்றன.

இதை வள்ளுவன் தெளிவான பார்வையில் எளிதாக விளக்குகிறார் பார்ப்போம்:

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
[உண்டது ஜீரணமாதறிந்து உணவை எடுத்துக்கொண்டால் உனக்கு மருந்தே தேவையிலலை]
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதூய்க்கு மாறு”
[நீண்டநாள்வாழ செரிக்கும்தன்மையறிந்து உண்க]
“அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
தூய்க்க துவரப்பசித்து”
[உண்ட உணவு செரித்து பசித்தபின் புசி]
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிக்கு”
[ஒவ்வாத உணவை ஒதுக்கி,அளவோடு உண்ணும் மனிதனுக்கு வியாதியில்லை]
“இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான் கண் நோய்”
[அளவரிந்து உண்பவனிடம் உள்ள இன்பம்நிலைக்கும், அதிகமாக உண்பவனிடம் நோய் நிலைக்கும்]
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்”
[பசியின் தன்மை அறியாமல் அதிகம் உண்பவன் அவதிப்படுவான்]


நமது உடலில் ஏற்படும் வேகங்கள் என14 உள்ளன அவற்றை அடக்கவோ அதில் மாற்றம் ஏற்பட்டாலோ நோய் வருகின்றன-

“பதினான்கு வேகப்பேர்கள்
பகர்ந்திட அவற்றைக்கேளாய்
விதித்திடும் வாதம் தும்மல்
மேவு நீர் மலம் கொட்டாவி
கதித்திடு பசி நீர்வேட்கை
காசமோ டிளைப்பு நித்திரை
மதித்திடு வாந்தி கண்ணீர்
வளர் சுக்கிலம் சுவாசமாமே
1.அபான வாயு – பசியிண்மை ,உடல்வலி ,மலக்கட்டு
2.சிறுநீர் - கல்லடைப்பு , மூட்டுவலி ,குறிவலி
3.மலம் – மூட்டுவலி ,தலைவலி ,பலக்குறைவு ,மயக்கம் ,பசியின்மை
4.பசி - உடல் இளைத்தல் ,களைப்பு ,மயக்கம்
5.தாகம் – தலைசுற்றல் ,உடல் வறட்சி ,வாய் உலர்தல்
6.தும்மல் – தலைவலி,கண் மூக்கு வாய் இவற்றில் வலி
7.இருமல் - மார்புவலி,மூச்சுத்திணறல்,இரைப்பு
8.வாந்தி – சுரம்,இரைப்பு ,பித்தம்
9.கொட்டாவி – செரியாமை,தும்மல்,உடல்வலி
10.கண்ணீர் – தலைவலி,கண்நோய்,பீனிசம்,
11.தூக்கம் – தலைகனம்,கண்நோய்,மயக்கம்
12.ஆயாசம்[களைப்பு] – மயக்கம்,வெப்பம்,நினைவுக்குறைவு
13.சுக்கிலம்[விந்து] – சுரம்,நீர் அடைப்பு,மூட்டுவலி,வெள்ளை
14.சுவாசம்[மூச்சு] – இருமல்,வயிற்றுப்பொருமல்,சுவையின்மை

இவையன்றியும் நாம் நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும்மனசின் தாக்கங்கலால் வினை வந்துசேர்கிறது.அந்த வகையில்

நோய் உண்டாக்கும் குணங்கள்:
கோபம்
குற்ற உணர்வு
பயம்
சளிப்பு
துக்கம்

நோய் போக்கும் குணங்கள்:
அன்பு
சிரிப்பு
ஆர்வம்
நம்பிக்கை
மனவலிமை[சகிப்புத்தன்மை]

இத்தகைய குணங்களை ஏற்படுத்திக்கொள்தல் எந்தநோயையும் வெல்லமுடியும்.

பகல்பொழுது சிறிதுநேரஉறக்கம் நல்லது.புத்துணர்ச்சி தரும். அதிகநேர உறக்கம் சோம்பலையும் உடல்பருமனையும் ஏற்படுத்தும்.

“திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்
பெண்ணின் பாலொன்றை பெருக்காமல்-உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பார் தம்
பேருரைக்கில் போமே பிணி” –
தேரையர் பதார்த்தகுண சிந்தாமணியில் நோய்வராதிருக்க கூறும் அறிவுரை இது.

மலம்,சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல்,அதிக போகத்தில் ஈடுபடாமல், நீரை காய்ச்சிக்குடித்தும்,அதிக மோர்சேர்த்தும், நெய்யை உருக்கியும் உண்ணவேண்டும் என்கிறார் சித்தர்.

இரவு உணவு குறைவாக எடுத்துக்கொள்ளாம். நார்ச்சத்துள்ள பழவகைகள் சேர்த்தல் மலச்சிக்கலைதவிர்க்கும்.
பால் அருந்தும்பழக்கம் உள்ளவர்கள்- பசும்பால் நலம்.
ஆடை தூய அவரவர் காலசூழலுக்கு ஏற்றபடி அணியலாம். இரவில் தூங்கும்போது தழர்வான ஆடை அணிவது அவசியம்.

-- மீண்டும் சந்திப்போம்--

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, June 16, 2006

ஜாதியில்லா சமுதாயம்!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

ஜாதியில்லா சமுதாயம் சாத்தியமா!

வெளி உலகம் எப்படியோ சுமார் ஆயிரம்பேர் [எண்ணிக்கை சரியாதெரியலை மன்னிசிடுங்க]கூடும் ‘தமிழ்மணத்திலாவது’ சண்டையில்லா வாசம் வீசுவோமே!

நிலத்தில் நீர்நிறப்பி வைக்கப்பட்டுள்ள எல்லா தண்ணீர் குடத்திலும் வானத்து சூரியன் தனித்தனியே தெரிந்தாலும் சூரியன் என்னவோ ஒன்றுதான், அதை மூடிவைப்பதனால் ‘அது’அதற்குள் அடங்குமோ!


அதில் என்குடத்துசூரியந்தான்பெரிசு,உயர்ந்தது,தெளிவானது,
ஒளிபொருந்தியது என்று பேசிக்கொண்டிருப்பதில் யாருக்கு என்ன நன்மை.
மூடிய குடத்துக்குள் இல்லாதகதிரவன் போல் வறட்டுகெளரவம், வீம்பாகி மூடிய உன் இதயத்துள்ளும் ஒன்றும் இருக்காது.


அணு முதல் அண்டமெங்கும் வியாபித்திருக்கும் ஆற்றலை உனக்கு பிடித்த, நம்பிக்கைகொண்ட பெயரில், உருவத்தில் போற்றுவது,பாடுவது,பேசுவது அடுத்தவனுக்கு இடையூறின்றி
யார் மனசும்நோகாமல் செய்தால் பிரச்சணையில்லை.

மதம் மொழி சாதி எல்லாமே கும்பல்கும்பலாய் வாழ்ந்தமனிதன்
அவன் வாழ்கைவசதிக்காக உருவாக்கிக்கொண்டது.
அந்தநாள் மதம் இன்றும் மாறாமலிருக்கிறதா! பண்டைய மொழிதான் இன்றுநாம் எழுதுகிறோமா!பேசத்தான் செய்கிறோமா! இல்லையல்லவா அதேபோல் சாதியென்ன எல்லாமே மாறிப்போகும்.
அது எப்படிமாறும்- இயற்கையாகவோ, செயற்கையாகவோ மாறும்.
நீ என்னநினைக்கிறாய் உன்மதம் உன்மொழி உன்இனம் எங்கும் பரவிநிழைக்க விரும்புகிறாய்,என் மக்களே சிறந்தோர் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் மற்றவர்கள் எல்லாம்பிறகுதான். இந்த மனிதனின் மாண்புமிகு மனப்பான்மைதான் ஆட்டத்தின் அஸ்திவாரமே! ‘ஆட்டம்முடிவில் அஸ்திக்ளின்சாரம்’

என் மதம் இல்லாமல்போய் விடும்,என் மொழி இல்லாமல் போய்விடும்- விடமாட்டேன் அதற்காக பிரச்சாரம் செய்வேன்,என்சொத்து முழுவது அதற்காக வாரிக்கொடுப்பேன்
என் ஜாதிக்காரன் மட்டும் நன்றாக இருக்க பாடுபடுவேன் என்றால் என்னசெய்ய முடியம். உனக்கு அதனால் கிடைக்கும் நிம்மதி,பேரும் புகழும் குறுகியவட்டமாய் போய்விடும், இதையே நீ பாரபச்சமின்றி எல்லோருக்கும் பயன்பட ஏதேனும்செய்தால் உண்மைஉலகம் உன்னை வாழ்த்தும்.









Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, June 09, 2006

மதுமிதா அவர்கள் பார்வைக்கு

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

வலைப்பதிவர் : சித்தன் (நிஜப் பெயர் சோமசுந்தரம்)
வலைப்பூ பெயர் : நீலமலர்கள்
சுட்டி :http://chiththan.blogspot.com
ஊர் : ஈரோடு மாவட்டத்தில், கோபி அருகே திங்களூர்

நாடு :தமிழ்நாடு

வலைப்பூ அறிமுகம்செய்தவர்
தாணு அவர்கள். உடன் பணியாற்றி, நெருங்கிய குடும்பத் தோழியானவர்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள் :29 th August 2005

இது எத்தனையாவது பதிவு :30
இப்பதிவின் சுட்டி :http://chiththan.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
தாணு, ராம்கி போன்றோரின் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தபோது, எனது சித்த மருத்துவம் சம்பந்தமான குறிப்புகளை அரங்கேற்ற தகுந்த இடமாகத் தெரிந்தது.
சந்தித்த அனுபவங்கள்:
பதிவு எழுத ஆரம்பித்துவிட்டாலும் கூட அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. வீடு புண்ணியார்ச்சனை, அடுத்து மகள் திருமணம் என பொழுது பறந்துவிட்டது. அதனால் சொல்லிக் கொள்ளும்படியான அநுபவங்கள் அதிகம் இல்லை.
பெற்ற நண்பர்கள்:
காசி, செல்வராஜ் போன்றவர்களுடன் டெலிபோன் பரிச்சயம் உள்ளது. ராமநாதன், இளா,சிபி போன்றோருடன் கொஞ்சம் கொஞ்சம் அறிமுகம் ஆகியுள்ளது. இன்னும் நிறைய நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்
கற்றவை:
பேனா பிடித்து எழுதும்போது வராத எழுத்துப் பிழைகள் டைப் செய்யும்போது அதிகம் வந்துவிடுகிறது.
வலைப்பூக்கள் பாதுகாப்பான இடம்தான் என்றாலும் கூட போட்டோக்களை ஏற்றுவது நல்லதன்று என்று புரிந்து கொண்டேன்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
எடிட் செய்யாமல் எது பற்றியும் எழுதலாம் என்பதே நன்றாக இருக்கிறது.
இனி செய்ய நினைப்பவை:
அதிக நேரம் வலையில் விழ வேண்டும்.
எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளணும்
நிறைய பதிவுகள் வாசிக்க வேண்டும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
பள்ளிப் பருவம் முழுவதும் திங்களூரில்
BIM(Bachelor of Siddha Medicine)- திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரியில்
அரசு சித்த மருத்துவராக 20 வருடங்கள், இன்னுமதே வேலைதான். ஊர் மட்டும் பெருந்துறை இப்போது.
மகளுக்கு சென்ற வாரம்தான் திருமணம் இனிதே நடந்தேறியது.
மகன் பள்ளிப் பருவத்தில் இருக்கிறான்.
ஆர்வம்:
பாடல்கள் கேட்பதில் அலாதி ஆர்வம்.
கம்ப்யூட்டரில் வீடியோ மிக்ஸிங் செய்வது பொழுது போக்கு.
தற்சமயம் ப்ளாக் பக்கம் விழுந்து கிடப்பது







Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, May 27, 2006

மணமக்களும்,மணவிழா அழைப்பிதழும்



Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????01.06.2006 அன்று நடைபெறவிருக்கும்
மகளின் திருமணத்திற்கு அனைத்து
‘தமிழ்மண’அன்பர்களையும்
அன்போடு அழைக்கின்றேன்



தமிழ்மண அன்பர்களின்
தரிசணம் வேண்டும்....!
நேச நெஞ்சங்களின்
வாழ்த்துக்கள் வேண்டும்....

மகளுக்காக.......

நேற்றுபோல் தோன்றுதடா..!
சின்ன அணில்குட்டியாய்!
சிறகுமுளைக்காத சிட்டுகுருவியாய்!
உன் தாயின் அரவணைப்பில்
தூக்கத்தில் சிரிப்பாயே!
ஒரு கையளவு உனை தூக்கிக்கொஞ்சிய
நாட்கள் நேற்றுபோல் தோன்றுதடா...

நிகழ்காலம்போல் நீண்டு தெரியாமல்
கடந்தவைகள் கனவுபோல்....
எதனால்..!

பொம்மையாய் துள்ளித்திரிந்தவள்
பெண்மை சூடப்போகிறாள்
பொம்மைப்பாத்திரங்களில் சோறாக்கி
கொடுத்தவளே!
சமையலறை திசையாச்சும்
அறிவாயா..!
பாவாடைப்பருவத்தில் வெற்றிலை
மெல்லும் பாட்டியானாய்..
சின்னச்சின்ன பொய்களால் அம்மாவின் அடிகாண்பாய்...
மெல்லச்சிரித்து தாயின்மடி சேர்வாய்....
இறைவனுக்கு பொறாமையோ..பொறுமையின்மையோ...
தாய்ப்பறவையைத் தத்தெடுத்துக்கொண்டான்
சொந்தத்தின் நட்பும்,நட்பின் சொந்தமும் உனை
சீராட்ட மீண்டும் அம்மாவின் மடிகண்டாய்..

அம்மாவின் கோபமும் அப்பாவின் சோம்பலும்
ஒன்றான செல்லமே
இரண்டையும் இங்கேயே விட்டுப்போ...

கொஞ்சம் மிரட்டிட கண்ணீர் சிந்துவாய்
பாலைக்கூட முகர்ந்தபின் அருந்துவாய்

என் சுண்டுவிரள் பிடித்து நடந்த கைகள்
தோளோடு கைபோட திருவிழா வருது

பாசத்தை நேசத்தை பங்குபோடத்தெரியாதவளே
பங்கு போட ஆள் வருது...

மகளாய் தாயாய்
எல்லோரும் விரும்பும் அன்புத் தோழியாய்
கோபத்தில் அமைதியாய்
இன்பமெனில் மத்தாப்பாய்
சொல்லால் சுடாமல் யாரையும்
குறையையும் நிறையாக்க விழித்திருப்பாய்!

உன் நிழல்களிலே வசந்தங்கள் உருவாக்கு....
நீ இருக்குமிடம் ஆனந்த இசைப்பாட்டு...

தாயின் கனவுகளை
சூழ்ந்தார் வாழ்த்துகளை
அன்பின் வேள்விதனை
நட்பின் மிகுசுகத்தை
உரிமையாய் கொண்டாடு
உண்மை இன்பம் உன்னோடு....

கர்வமின்றி கடந்திடு காலத்தை
நலும் நலம் கிடைத்திடும் காலத்தில்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

மணவிழா அழைப்பிதழ்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

01.06.2006 அன்று நடைபெறவிருக்கும்
மகளின் திருமணத்திற்கு அனைத்து
‘தமிழ்மண’அன்பர்களையும்
அன்போடு அழைக்கின்றேன்


தமிழ்மண அன்பர்களின்
தரிசணம் வேண்டும்....!
நேச நெஞ்சங்களின்
வாழ்த்துக்கள் வேண்டும்....

மகளுக்காக.......

நேற்றுபோல் தோன்றுதடா..!
சின்ன அணில்குட்டியாய்!
சிறகுமுளைக்காத சிட்டுகுருவியாய்!
உன் தாயின் அரவணைப்பில்
தூக்கத்தில் சிரிப்பாயே!
ஒரு கையளவு உனை தூக்கிக்கொஞ்சிய
நாட்கள் நேற்றுபோல் தோன்றுதடா...

நிகழ்காலம்போல் நீண்டு தெரியாமல்
கடந்தவைகள் கனவுபோல்....
எதனால்..!

பொம்மையாய் துள்ளித்திரிந்தவள்
பெண்மை சூடப்போகிறாள்
பொம்மைப்பாத்திரங்களில் சோறாக்கி
கொடுத்தவளே!
சமையலறை திசையாச்சும்
அறிவாயா..!
பாவாடைப்பருவத்தில் வெற்றிலை
மெல்லும் பாட்டியானாய்..
சின்னச்சின்ன பொய்களால் அம்மாவின் அடிகாண்பாய்...
மெல்லச்சிரித்து தாயின்மடி சேர்வாய்....
இறைவனுக்கு பொறாமையோ..பொறுமையின்மையோ...
தாய்ப்பறவையைத் தத்தெடுத்துக்கொண்டான்
சொந்தத்தின் நட்பும்,நட்பின் சொந்தமும் உனை
சீராட்ட மீண்டும் அம்மாவின் மடிகண்டாய்..

அம்மாவின் கோபமும் அப்பாவின் சோம்பலும்
ஒன்றான செல்லமே
இரண்டையும் இங்கேயே விட்டுப்போ...

கொஞ்சம் மிரட்டிட கண்ணீர் சிந்துவாய்
பாலைக்கூட முகர்ந்தபின் அருந்துவாய்

என் சுண்டுவிரள் பிடித்து நடந்த கைகள்
தோளோடு கைபோட திருவிழா வருது

பாசத்தை நேசத்தை பங்குபோடத்தெரியாதவளே
பங்கு போட ஆள் வருது...

மகளாய் தாயாய்
எல்லோரும் விரும்பும் அன்புத் தோழியாய்
கோபத்தில் அமைதியாய்
இன்பமெனில் மத்தாப்பாய்
சொல்லால் சுடாமல் யாரையும்
குறையையும் நிறையாக்க விழித்திருப்பாய்!

உன் நிழல்களிலே வசந்தங்கள் உருவாக்கு....
நீ இருக்குமிடம் ஆனந்த இசைப்பாட்டு...

தாயின் கனவுகளை
சூழ்ந்தார் வாழ்த்துகளை
அன்பின் வேள்விதனை
நட்பின் மிகுசுகத்தை
உரிமையாய் கொண்டாடு
உண்மை இன்பம் உன்னோடு....

கர்வமின்றி கடந்திடு காலத்தை
நலும் நலம் கிடைத்திடும் காலத்தில்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, April 08, 2006

SMS கடிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????அன்பான அன்பர்களே உங்களைப்பாத்து ரெம்பநாளாச்சு
எல்லாரும் செளக்கியமா இருக்கீங்க தானே,
அதான் கொஞ்சம் கடிக்கலான்னு வந்தேன்.....
யாரும் கோவிக்காதீங்க!

SMS கடிகள் சில:


கண்டக்டர் தொங்கினா யாரும் டிக்கட்
எடுக்கமாட்டாங்க!
ஆனா டிரைவர் தொங்கினா
எல்லாரும் டிக்கட் எடுத்துடுவாங்க!


தெனமும் பூ வாங்கிட்டுப்போரியே!
பொண்டாட்டிமேல அவ்வளவு பாசமா?
ம்..பாசம் பூக்காரி மேல!


ஒரு டீக்கடையில்: என்னையா டீயிலே
“ஈ” குளிக்குது!
ஆமா...நீ கொடுக்கர இரண்டார் ரூபா காசுக்கு
திரிஷ்ஷாவா வந்து குளிப்பா!


ஒரு அரசனுக்கு தூதுவந்த புறாவுக்கு இரண்டு
கால்களுல் இல்லை
என்ன மந்திரி இது!
இது தான் “MISSED CALL” அரசே!


என்னதான் திருவள்ளுவர் 1330 குறள் சொன்னாலும்
அவராலே ஒரு குரலில்தான் போசமுடியும்.


‘RATION ‘ ‘FASHION ‘ என்ன வித்தியாசம்?
எடை கொறஞ்சா…RATOIN !
உடை கொறஞ்சா .. FASHION!


முக்காலியிலே உக்காரலாம்
நாற்காலிலே உக்காரலாம் ஆனா
தக்காளியிலே உக்கார முடியுமா!


வெட்டி சம்பளம் வாங்கரவங்க யாரு?
‘டைலர்’,’பார்பர்’,

கேள்வி: நீ மூன்றாம் மாடியில் இருக்கும்போது
தீ பிடித்துக்கொள்வதாக நினைத்துக்கொள்!
எப்படி நீஅங்கிருந்து தப்பிப்பாய்?
ரெம்ப சுலபம்...கற்பனையை நிருத்திக்கொள்வேன்.


.When u r in bright, everything will follow u…
When u enter dark even ur own shadow will not follow u…


ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்?
மரங்கள் நட்டினார்?
மாணவன்: குளங்கள்... பெண்கள் குளிக்க!
மரங்கள்... பின்னாலிருந்து எட்டிப்பார்க்க!

நாம அடிச்சா அது மொட்டை!
அதுவாவிழுந்தா சொட்டை!
மண்டையிலே போடறது DAI
மண்டையப்போடறத DIE .

பதிணெட்டுப்பட்டி மக்களுக்கும் நான் சொல்லரது
என்னான்..னா..
GOOD EVENING….
நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு!
O K .O K . GOOD MORNING…


. A Dog was following Sardar ,
Sardar was laughing. A man asked, ”WHY R U laughing?”
Sardar : “I have “AIRTEL” but “HUTCH” network is
FOLLOWING me




‘ கஜினி’ சூர்யா:- நான் சஞ்சய் ராமசாமி, அசின் “I LOVE U”
அசின் :-டெய் மொட்டை இது மட்டும் என் அண்ணனுக்கும்
LOVER- க்குத்தெரிஞ்சுது நீ..தொலஞ்சே !
சூர்யா :- யார்டி உங்க அண்ணே? வெண்னெ!
அசின்:- இந்த SMS படிக்கறவர்!
சூர்யா:- யார்டி உன் LOVER ?
அசின்:- கொஞ்சம் கீழ போய்ப்பாரு பேரு, போன் நெம்பர்
இருக்கும்!


.புறா,அணில் இதில் தபால் அனுப்ப உகந்தது எது?
அணில்தான் அதுக்குத்தானே “பின்கோடு” இருக்கு!


.பீடியால் சுட்டபுண் உள்ளாரும் ஆராதே
பிராந்தியால் வெந்த வயிறு _ புதுக்குறள்...555


இது ஒரு காதல்கவிதை:-

அவள்கண்கள் ஒரு திங்கள்
வாய் ஒரு செவ்வாய்
கன்னம் ஒரு புதன்
உதடோ ஒரு வியாழன்
காது ஒரு வெள்ளி –
மொத்தத்தில் அவள் ஒரு சனி.....


அம்மா அடிச்சா வலிக்கும்!
டீச்சர் அடிச்சா வலிக்கும்!
பிரண்ஸ் அடிச்சா வலிக்கும்!
போலீஸ் அடிச்சா வலிக்கும்! ஆனா
“சரக்கு” அடிச்சா வலிக்குமா !....

இதற்கு ஒரு அன்பரின் அனுபவபூர்வபதில்-
ஓவரா! அடிச்சா “செமத்தியா வலிக்கும்”

மற்றொரு நண்பர்-
“சைட் அடிச்சா வலிக்குமா!
ஜோக் அடிச்சா வலிக்குமா! என்றார்...


ஒரு காட்டுக்குள்ள 10பேர் போயிட்டிந்தாங்க
அப்போ அங்கவந்த சிங்கம் 6 பேர கொன்னுடிச்சு!
4 பேர மட்டும் ஒண்ணுமே செய்யலெ!
ஏன்னா ...அவுங்க 4 பேரும் “LOIN’S CLUP MEMBERS”


உடம்ப நல்லா பாத்துக்கோ!
வேளா வேளைக்கு நல்லா சாப்புடு
அதிகமா தூக்கம் கெடாதே!
நீ ரெம்ப நாளைக்கு வாழனும்!
நேத்து”DISCOVERY” ல்லே
சொன்னாங்க “குரங்குக்கூட்டம்”
அழிஞ்சிட்டுவருதுன்னு.....!


லாரியில விழுந்தா உடனே சாவு !
காதல்லே விழுந்தா தெனந்தெனம் சாவு..!


MOST OF THEM SAY
“Behind Every SUCCESSFULMAN
There is a WOMAN”
But nobody knows that the fact is
“WOMAN GOES BEHIND SUCCESSFUL MEN ONLY”


G->Ghost
I->In
R->Real
L->Life
“so avoid girls”
From-“MEN AWARENESS CLUP”
Fwd 2 all & save men save world….


The most selfish 1 letter ‘I’ AVOID it,
Most satisfactory 2 letter ‘WE’ USE it,
Most poisonous 3 letter ‘EGO’ KIIL it,
Most used 4 letter ‘LOVE’ VALUE it,
Most pleasing 5 letter ‘SMILE’ KEEP it,
Fastest spreading 6 letter ‘RUMOUR’ IGNORE it,
Hard working 7 letter ‘SUCCESS’ ACHIVE it,


I MISS U ,
I LIKE U
I CARE ABOUT U
I m ALWAYS WITH U
IT’S ALL MIXED A ONE SENTENCE
‘I am your FRIEND!

Man’s life!
Before Marriage SPIDERMAN
After finding a girl SUPERMAN!
Engagement GENTLEMAN!
After Marriage WATCHMAN!
10 Years latter DOBERMN!
After 20 Years ……


BOY:- Hay! Sweaty
என்ன காலையிலே 2 இட்லி
சாப்டயா!
GIRL:- ஆமாண்டா! எப்படி கண்டுபிடுச்ச!
BOY:- அதான் நெஞ்சிலேயே நிக்குதே!


If U R A genius , try this fill in d blanks with ONLY
YES or NO
1-…….I Don’t have BRAIN.
2-……..I Don’t have SENSE.
3-………I’m STUPID.
4………..I’m FOOL.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.