Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

<$நீலமலர்கள்>

Sunday, November 27, 2005

மூலிகைச்செல்வங்கள் 5 ,6 &7[சீரகம்,சோம்பு&கறிவேப்பு]

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? சீரகம் {CUMINUM CYMINUM}
ENG- Cumin seed OR caraway seed
FAM- UMBELLIFERAE

வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது.காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.
சீர்+அகம்=சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பொறும்பங்காற்றுகிறது.
கார்ப்பு இனிப்பு சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.
இதன் மனம் சுவை செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில்
சேர்க்கப்படுகிறது.


சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணைப்பொருக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை
அழிக்கவும் கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.


நாட்பட்ட கழிச்சல் தீர மற்றமருந்துகளுடன் சேர்த்துகொடுக்க நல்லபலந்தரும்.
இரத்ததை சுத்தமாக்குகிறது,தொல் நோய்களை கட்டுப்படுத்துகிறது,

பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை,நெஞ்செறிச்சல் தீர
சீரகம்+கொத்தமல்லி+சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில்
கொதிக்கவைத்து வடித்து டீ போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகிவரலாம்.


வாய்ப்புண் உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.


கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக்குறைக்க எழுமிச்சம்பழச்சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்து கொடுக்கலாம்.
தொண்டை கம்மல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும்.


விக்களை நிறுத்தும்
“எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ன விக்களும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே” என சித்தர் பாடல் ஒலிக்கிறது
.
சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.



சோம்பு {PIMPINELLA ANISUM}


எகிப்தை நாட்டை தாயகமாய் கொண்டிருந்தாலும் உலகில் எல்லாநாடுகளிலும் இப்போது பரவலாக பயிர்செய்ய்ப்படுகிறது.
ஆங்கிலத்தில் ANISE or SWEET FENNEL or ANISEED என்று அழைக்கப்படுகிறது.
சோம்பும் சீரகமும் ஒரே தாவரக்குடும்பத்தை[Umbelliferae] சேர்ந்தாதாகும்.
அதைப்போலவே அவற்றின் செய்கைகளும் மருத்துவ குணங்களூம் பொதுவாக ஒரேமாதிரியே உள்ளன. சீரகத்தைப்போலவே சற்றே பெறிதாக இருக்கும் சோம்பு.
அசைவ ஹோட்டல்களில் சர்க்கரை கலந்துவறுத்த சோம்பு சுவைத்திருப்பீர்களே!

கவிதை தனியாகப்போட்டால் படிக்க ஆளில்லை எனவே இங்கே!

சந்தில் ஒரு சிந்து ! படிச்சுட்டுத்திட்டாதீங்க!!!


என் அவளே!!!

யாரோ யாருக்கோ எழுதியதை
ஒருமுறை படிப்பாய் கதைபோல
உனக்காய் ஒன்று நினைவாய் எழுதியதை
மறுமுறை படித்திடு கவிதைபோல.


கடலுக்குள் ஓடும் நதியாய்
என் இரத்தநாளங்களில்....
பூமிக்குள் பூக்கும் நெருப்பாய்
என் நெஞ்சக்குழிக்குள்....
ண்ங்ள் அனைத்தும் அடங்கும் வெண்ணிறமாய்
உனக்குள் என் முகங்கள்.....


கறிவேப்பிலை{BERGERA KOENIGII}
ENG :CURRY LEEF TREE


பெருப்பாலான வீட்டுத்தோட்டங்களில் வழர்க்கப்படும் சிறுமர வகுப்பைச்சார்ந்தது .நமது எல்லாவிதமான சமையலிலும் மணமூட்டியாகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது.


லேசான கார,கைப்பு சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டது.
பசி,உடல்வன்மை,சீரணத்தை சீராக்குதல்,நரை நீக்கும் இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த கறிவேப்பு கண்பார்வைக்கும் நல்லது.


தேவையான அளவு இதன் இலைகளை நெய்யில் வறுத்து பொடிசெய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட கண்பார்வைக்கு நல்லது.


மலச்சிக்கள் தீர :–
கறிவேப்பிலை+இஞ்சி+மிளகு+சீரகம்+பெருங்காயம்
இவைகளை வெய்யிலில் காயவைத்து இடித்து வைத்துக்கொண்டு இரவில் சாதத்துடன் சாப்பிடலாம்.


குமட்டல்,வாந்தி,சீதபேதி[ Dysentery ]க்கு
நெய்யில் வதக்கிய கறிவேப்புடன் சிறிது உப்பு புளி காரம் சேர்த்து அரைத்து துவையல்செய்து உண்ணலாம்.


சளி,இருமல்,சீதக்கழிச்சல்,மதுமேகம்[ Diabetes ]குறைய:
இலைகளை சுத்தம்செய்து [2 கொத்து]2 டம்லர் நீர்விட்டு ஒரு டம்லராக காய்ச்சிவடித்து ¼ பங்காக 4 வேளை குடித்துவரலாம். முடிந்தால் இலைகளைப்பச்சையாகவும் உண்ணலாம்.


இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யானது குளிர்ச்சிதருவதாகவும் ,கண்களுக்கு நன்மைபயப்பதாகவும்
நரை நீக்குவதாகவும் அறியப்பட்டுள்ளது.
விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் இலைகளை பாலில் வேகவைத்து அரைத்துக்கட்ட வலி,தடிப்பு,எரிச்சல் குறையும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, November 23, 2005

மூலிகைச்செல்வங்கள்-4

மிளகு {PIPER NIGRUM}

[BLACK PEPPER]

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? “பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.

உணவுப்பொருளாகவும் மருத்துவபொருளாகவும் பண்டுதொட்டு பயண்படுத்தப்பட்டுவரும் மிளகானது சிறுகொடிவகையைச்சார்ந்தது. மலைப்பகுதியில் 1200 மீட்டர் உயரத்திற்கு மேல் பயிர்செய்யப்படுகிறது.
இந்தியாவைத்தாயகமாக்கொண்டு சுமார் 3000 ஆண்டுகளுக்குமுன்பிருந்தே நம்மவர்களால் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

நம் நாட்டில் மிளாகாய் அறியப்படும் முன்னர் மிளகு மட்டுமே உணவில்
பயன்படுத்தப்பட்டுவந்தது.

காரம் கைப்பு சுவையும்,வெப்பத்தன்மையும் கொண்டது.

சளி இருமல் வயிற்றுவாயு செறியாமை சுரம் இவைகளை குணமாக்குவது
மிளகின் பொதுவான குணமாகும்.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும்
சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது.

வேண்டிய அளவு மிளகுத்தூளை புளித்தமோரில் ஊரவைத்து காயவைத்து
இளவருப்பாக வருத்து பொடிசெய்து வைத்துக்கொள்ளவும் .இதை 500 மி.கி
எடுத்து வெள்ளம் சேர்த்து உண்டுவர தலைவலி மூக்கடைப்பு தீரும்.

மிளகு+மஞ்சள்+பூண்டு ஒருபல் இவைகளை இடித்து பாலில் வேகவிட்டு
வடித்தபாலைக்குடிக்க இருமல் தொண்டைக்கம்மல் குணமாகும்.

மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து
வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால்,உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர
முடிமுளைக்கும்.


மிளகில் உள்ள வேதியட்பொருக்கள் கீழே

Piperine 5-9%
Piperidine 5%
Balsamic volatile essential oil 1-2%
Fat 7%
Starch,lignin,gum, 1%
Proteids 7%
Ash containing organic matter 5%

நீண்ட நாளாச்சு உங்களையெல்லாம் பாத்து

மன்னிக்கனும் மன்னர்களே![இரு பால் மன்னர்களும்]

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, November 06, 2005

மூலிகைச்செல்வங்கள்-3 மஞ்சள்



மஞ்சள் [Curcuma longo ]

மஞ்சள் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ஈரோடுதானே!
இல்லை எங்களுக்கு “மஞ்சக்காட்டு மைனா எனைகொஞ்சி கொஞ்சிப்போனா” என்ற நினைவென்றால் நான் பொறுப்பல்ல.
“மஞ்சள்பூசும் மஞ்சள்பூசும் வஞ்சிப்பூங்கொடி”
“மஞ்சளும் குங்குமம் கொண்டதாமரைப்பூ பேரின்பஓடையில் தள்ளாடுது”
“மஞ்சள் முகமேவருக மங்கள விளக்கேவருக”
“மஞ்சள் அரைக்கும்போதுமதிலேரிப்பாத்த மச்சான்
பக்கத்தில் வந்தாலென்ன சொந்தம் காண”என்று சிலருக்கு
பாடத் தோன்றலாம்.மஞ்சளைப்பற்றிப்பாடாத கவிஞர்கள்
இருக்கமாட்டார்கள்.

மஞ்சள் எனில் மங்களம். மஞ்சள் இல்லாத பண்டிகை எதையும் தமிழரிடத்தில் நினைத்துப்பார்க்க இயலாது.

தென்னிந்தியாவை பிறப்பிடமாகக்கொண்ட
மஞ்சளானது ஈரோடு கோவை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில்
அதிகம் விழைகிறது,ஈரோட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

பருத்தி,கரும்பு போன்று
மஞ்சள் பெரிய அளவில் வியாபாரப்பொருளாகும்.ஈரோட்டில் இதற்கென மஞ்சள்மண்டிகள் நிறைய உள்ளன.சமீபத்தில்கூட ஈரோட்டில் “மஞ்சள் வளாகம்”ஒன்று துவங்க முதல்வர் அவர்கள் அடிக்கல்நாட்டியுள்ளார்.

மஞ்சள் பூமிக்கடியில் விழையும் கிழங்குவகையைச்சார்ந்தது.வெட்டி எடுக்கப்படும் கிழங்கை மாட்டுசாணிப்பாலில் ஊரவைத்து வேகவைத்து
பதப்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது.இதுவே கறிமஞ்சள் ஆகும்.

கஸ்தூரி மஞ்சள் என்று காடுகளில் தானாகவிழையும் &பயிரிடப்படும் இனமும் உண்டு.[Curcuma aromatica] இதன் குணத்தினால் அழகு,நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள்,வாசனைப்பொருட்கள்,சோப்புகள்,தைலங்கள் தயார்செய்யப்படுகின்றன.மற்றபடி மஞ்சள் போன்றே இதன் குணங்களும் அமைந்துள்ளன.


எனவே இன்று நம்ம ஊர்மஞ்சளைப்பற்றிக்கொஞ்சம்...

மிகச்சிறந்த கிருமி நாசினியான மஞ்சள் கல்லீரலை பலப்படுத்தும்,குடல் புண்களை குணமாக்கும்,பசியை கொடுக்கும்,
சுவையின்மை போக்கும்,

வீக்கம் கட்டிகளை கரைக்கும்,குடற்ப்புழுக்களை அழிக்கும்,தோல் நோய்கள் குணப்படுத்தும்.[Urticaria,Chronic skin eruptions ]

மஞ்சள் மதுமேகம்,காமாலை,குடற்புண் போன்றநோய்களுக்கு
தரப்படும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

வெளிப்புறமாக பயன்படுத்தும்போது கற்றாழைவாசம் வீசும்
வியர்வை நாற்றத்தையும்,தோல் நோய்களையும் குணமாக்கும்.[மஞ்சள் சேர்த்து செய்யப்படும் குளியல் கலவைத்தூள் செய்முறை பின்னர் தருகிறேன்.]முகப்பருக்களை நீக்க உதவும்.
வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது போடலாம்.

சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நிறம் சுவை மட்டுமின்றி ஜீரணத்தை
எளிதாக்கி உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதையும் நீக்குகிறது.

மேலும் மஞ்சளுக்கு புற்றுநோயை குணமாக்கும் தனமைபற்றி
பத்மா[தேன் துளி] அவர்களின் கட்டுரைப்பதிவினை மக்கள் ஏற்கனவே அறிவீர்கள்.இலங்கை மக்கள் அதிக அளவில் உணவில் மஞ்சளைசேர்த்துக்கொள்வதால் புற்றுநோயின் சதவிகிதம் அங்கு குறைவாக உள்ளதென ஆராய்ச்சிமுடிவுகள் தெரிவிக்கின்றன.[curcuma]

கால் ஆணிக்கு = கொஞ்சம்மஞ்சள்+வசம்பு கொஞ்சம்+மருதானி
இலை +கற்பூரம் சிறிது>இவைகளை அரைத்து காலாணிக்கு கட்டி
வர குணமாகும்.

பாலில் மஞ்சள்+மிளகு+பூண்டு சேர்த்து காய்ச்சி குடித்துவர சளி,இருமல்
குறையும். மஞ்சளை நெய்யில் கலந்து கொடுத்தாலும் இருமல் குறையும்.
முகப்பருக்களையும்,அழகைக்குறைக்ககூடிய இடங்களில் ஏற்ப்படும் ரோமங்களையும் நீக்கும் தன்மை இதற்க்கு உள்ளதால்
மஞ்சள் முகப்பூச்சு கிரீம்களில் அதிக இடம்பிடிக்கிறது.
1868 ஆம் ஆண்டு முதற்க்கொண்டே மஞ்சள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே ஆண்மக்களே மறக்கம மஞ்சளை சமையல்ல சேத்துக்கங்க!

எந்தஒரு காரியம் துவங்கும்போதும் மஞ்சள் அல்லது சாணத்தில்
பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை குத்தி பூஜை செய்வது தமிழர்
வழக்கம்.
இதற்கு விஞ்ஞான காரணமென எடுத்துக்கொண்டால்
மஞ்சள், மாட்டுசாணம், அருகம்புல் எல்லாமே சிறந்த கிருமிநாசினியாகும்.தத்துவமாக பார்த்தால் அருகு போல் வேறூன்றிஆல்போல் தழைத்து வாழ்கவென வாழ்த்துப்பா வில் கூறுவர்[அருகு எளிதில் எல்லா இடத்தில் ஆழமான வேர்களுடன் படரக்கூடியது ஆல மரம் பரந்துவிரிந்து விழுதுகளால் விருந்தோம்பி நீண்டநாள் நிலைக்கக்கூடியது.

இதே போல் மஞ்சளும் மங்களகரமாண எல்லாக்காரியங்களிலும்
பண்டையகாலம் தொட்டே பயன்படுத்தப்படுகிறது.அதன்
நிறம் மணம் சுவை குணம் பற்றி நம் முன்னோர்கள்
தெளிவாக அறிந்திருந்தனர்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.